ஆப்நகரம்

Arvind Kejriwal: ஒரே மாதத்தில் ஆச்சரியம்; கோவிட்-19ஐ எப்படி சமாளித்தது டெல்லி?

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் மரணங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு டெல்லியில் குறைந்துள்ளது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Jul 2020, 1:25 pm
டெல்லி அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு நம்பிக்கையூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, ஜூன் ஒன்று முதல் 12 வரை தினசரி 1,089 என கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. இந்நிலையில் ஜூலை 1 முதல் 12 வரை 605 என வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தின் முதல் பாதியில் தினசரி 91 என்ற எண்ணிக்கையில் டெல்லியில் கொரோனா மரணங்கள் பதிவாகி இருந்தன. இதே காலக்கட்டத்தின் நடப்பு மாதத்தில் 50 என்று எண்ணிக்கையில் குறைந்துள்ளது. கொரோனா மரணங்கள் கிட்டதட்ட 44 சதவீதம் குறைந்துள்ளன.
Samayam Tamil Arvind Kejriwal


கடந்த மாத பாதிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டால் ஜூலை இறுதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று அஞ்சப்பட்டது. ஆனால் பாதிப்பு இன்னும் 1.5 லட்சத்தையே தாண்டவில்லை. இதற்கு மாநில அரசின் சிறப்பான நடவடிக்கையே காரணம் என்று சொல்லப்படுகிறது. ஜூன் ஒன்று முதல் 12ஆம் தேதி வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 நாட்களில் 67 சதவீத நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 34 சதவீதம் பேர் 24 மணி நேரத்தில் பலியாகிவிட்டனர். இதுவே ஜூலை 1 முதல் 12ஆம் தேதி காலக்கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 4 நாட்களில் 35 சதவீத நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இண்டர்நெட்டிற்காக தினமும் மலையேறும் சிறுவன்; தொடரும் ஆன்லைன் கிளாஸ் சிக்கல்!

24 மணி நேரத்திற்குள் 15 சதவீதம் பேர் பலியாகி இருக்கின்றனர். இறப்பு எண்ணிக்கையை மேலும் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்நிலை குறித்து முதலமைச்சரே நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்கிறார். உரிய நேரத்தில் முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகள் இறப்பை தடுக்க பெரிதும் உதவுகின்றன.

அரசு மருத்துவமனைகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். ’டெல்லி மாடல்’ இந்தளவிற்கு வெற்றி பெற்று மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதற்கான காரணங்கள்,

* விரிவான மருத்துவ பரிசோதனைகள்

* ஆக்ஸிமீட்டர்

* விரைவான ஆம்புலன்ஸ் திட்டம்

* மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் தயார்படுத்துதல்

* அவசர சிகிச்சை மையங்களில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல்


உள்ளிட்டவை ஆகும். நாளொன்றுக்கு சராசரியாக 5,500 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஜூலை மாதத் தொடக்கத்தில் தினசரி 21,000 பேருக்கு பரிசோதனைகள் செய்ய திட்டமிடப்பட்டது. அதாவது மில்லியனில் 50,000 பேர் என்ற விகிதத்தில் சோதனைகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த இலக்கை அடைய படிப்படியாக முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் மிகச்சிறந்த வெற்றி பெற்றுள்ளதாக மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஆக்சிமீட்டர்கள் அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டிருந்தன.

பெருவெள்ளத்தில் பிறந்த உயிர்; தத்தளிக்கும் மீட்பு படகில் நிகழ்ந்த ஆச்சரியம்!

இதன்மூலம் நோயாளிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் உடனே மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல உதவிகரமாக இருக்கிறது. இவ்வாறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல விரைவான ஆம்புலன்ஸ் சேவைக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். தினசரி ஆம்புலன்ஸ்கள் அழைக்கப்படும் நேரம், உடனே குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் நேரம் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு முதலமைச்சரால் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மே மாத இறுதியில் 3,700 என்றிருந்த படுக்கை வசதிகள், ஜூலை மாத தொடக்கத்தில் 15,000ஆக அதிகரித்தது.

டெல்லி கொரோனா ஆப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஜூன் மாத தொடக்கத்தில் 500 ஐசியூ படுக்கைகள் இருந்தன. தற்போது 2,200க்கும் அதிகமான ஐசியூ படுக்கைகள் இருக்கின்றன. இவற்றில் 1,400 படுக்கைகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி