ஆப்நகரம்

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு!!

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான தடையை, பாட்டியாலா நீதிமன்றம் அக்டோபர் 8 வரை நீட்டித்துள்ளது.

Samayam Tamil 7 Aug 2018, 11:11 am
ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான தடையை, பாட்டியாலா நீதிமன்றம் அக்டோபர் 8 வரை நீட்டித்துள்ளது.
Samayam Tamil ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு!!
ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு!!


கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய, வரம்பை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியதாக, அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதே போல, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு பெறவும் உதவியதாக ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் இருவரையும் செப்டம்பர் 28 வரை கைது செய்ய பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்தது.

இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த தடைக் காலத்தை அக்டோபர் 8 ஆம் தேதி வரை நீட்டித்து, வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி