ஆப்நகரம்

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் மறைவு!

காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் புனேவில் காலமானார்.

Samayam Tamil 5 Aug 2020, 10:55 am
மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 89.
Samayam Tamil Shivajirao Patil Nilangekar


சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் குணமடைந்தார். அதன்பின் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்று வந்தது.

மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள லாதூரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் 1985 ஜூன் முதல் 1986 மார்ச் வரை மகாராஷ்டிரா முதல்வராக பதவி வகித்தார்.

ராமர் கோயில்: அடிக்கல் நாட்டும் முன் பார்க்க வேண்டிய ஐநூறு ஆண்டு கால வரலாறு!

1985 ஆம் ஆண்டில் எம்.டி தேர்வு முடிவுகளில் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, மும்பை உயர்நீதிமன்றம் அவருக்கு எதிராக கடுமையான தண்டனைகளை நிறைவேற்றியபோது, அவர் தனது பதவியில் இருந்து விலகினார்.

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில், "மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான டாக்டர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகரின் மறைவு குறித்து தெரிந்து கொண்டேன். அவருக்கு மனமார்ந்த அஞ்சலி. நீலாங்கேகர் குடும்பத்தினரிடம் எனது வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி