ஆப்நகரம்

மோடியால் 3800 கோடி நஷ்டம்: ஸ்டேட் வங்கி அதிர்ச்சித் தகவல்

: பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பு நீக்க உத்தரவினால் 3800 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது.

TNN 2 Oct 2017, 2:51 am
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பு நீக்க உத்தரவினால் 3800 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil demonetisation effect banks to suffer rs 3800 crore loss
மோடியால் 3800 கோடி நஷ்டம்: ஸ்டேட் வங்கி அதிர்ச்சித் தகவல்


பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவித்தார். பின்னர், புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகின. புதிய 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளும் விரைவில் புழக்கத்திற்கு வர இருக்கின்றன.

மோடியில் இந்த உத்தரவுக்குப் பின் நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதனால் சிறிய கடைகள் முதல் பெரிய மால்கள் வரை ஸ்வைப்பிங் எந்திரங்களை வங்கிகள் வழங்கியுள்ளன. இதனால் மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என ஸ்டேட் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால், கிரெடிட், டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. இதனால் ஸ்வைப்பிங் எந்திரம் வழங்கிய செலவை ஈடுகட்ட முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன. இதன் மூலம் வங்கிகளுக்கு இடையிலான பரிமாற்றத்தில் ஆண்டுக்கு ரூ.3800 கோடி வரை இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஸ்டேட் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி