ஆப்நகரம்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

ரூபாய் நோட்டுகள் சீர்திருத்த விவகாரத்தில் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தியுள்ளன.

TNN 14 Dec 2016, 11:30 am
ரூபாய் நோட்டுகள் சீர்திருத்த விவகாரத்தில் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தியுள்ளன.
Samayam Tamil demonetise opposition parties meet in parliament
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை!


ரூபாய் நோட்டு பிரச்னையில் இதுவரையிலும் தீர்வு எட்டப்படவில்லை. நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பண தட்டுப்பாடு பிரச்னை தொடர்பாக, என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது பற்றி பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்த்து வருகிறார்.

இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மக்களவை, மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபடுவதால், நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியுள்ளது.

இந்நிலையில், அடுத்தக்கட்டமாக, இந்த விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, நாடாளுமன்ற செயல்பாட்டை முடக்குவது மட்டுமின்றி, மத்திய அரசுக்கு எதிரானச் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி, நெருக்கடி அளிப்பதாக, முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற கூட்டம் நடந்தால் மட்டுமே பங்கேற்பது என்றும், அதுவரையிலும் புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்துவது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

Demonetise: Opposition parties meet in Parliament.

அடுத்த செய்தி