ஆப்நகரம்

தொடர்ந்து திருப்பதி உண்டியலில் விழும் செல்லாத நோட்டுகள்!

தொடர்ந்து திருப்பதி உண்டியலில் விழும் செல்லாத நோட்டுகள்!

TOI Contributor 12 Jan 2017, 2:22 am
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடைசெய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் இன்னும் திருப்பதி உண்டியலில் செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் காணிக்கையாக செலுத்துவது தொடர்கிறது.
Samayam Tamil demonetised notes continue flow in thirpathi temple hundial
தொடர்ந்து திருப்பதி உண்டியலில் விழும் செல்லாத நோட்டுகள்!


கடந்த 11 நாட்களில் சுமார் 1.7 கோடி ரூபாய் வரை செல்லாத பழயை ரூபாய் நோட்டுகளை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இதுவரை உண்டியலில் செலுத்தப்பட்டதில் அதிக அளவு கொண்ட தடை செய்யப்பட்ட பணம் 44 லட்சமாகும். டிசம்பர் 31ஆம் தேதியுடன் பழயை ரூபாய் நோட்டுகளை மாற்றவதற்கான கால அவகாசம் முடிந்துள்ள நிலையில் அதன் பிறகும் பக்தர்கள் திருப்பதி திருமலாவில் பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்தி வருகின்றனர் என்கிறார் கோவில் நிர்வாகி ஒருவர்.

புத்தாண்டு அன்று கூட 31 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. திருப்பதி கோவிலில் ஒரு நாளுக்கு சராசரியாக தங்கம், பணம் உள்ளிட்ட காணிக்கைகளை கணக்கிட்டால் 2.8 கோடி ரூபாய் வரை மதிப்பு பெறும். வருடத்திற்கு 1000 கோடி வரை காணிக்கை வருகிறது.

அடுத்த செய்தி