ஆப்நகரம்

தியோகார் - ஒடிசாவின் முதல் திறந்தவெளி கழிப்பிடமில்லா மாவட்டம்; மணல் சிற்பம் வைத்து வாழ்த்து...!

திறந்தவெளி கழிப்பிடமில்லா மாவட்டத்தை நினைவுகூறும் வகையில், மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

TNN 3 Aug 2017, 8:29 pm
புவனேஸ்வர்: திறந்தவெளி கழிப்பிடமில்லா மாவட்டத்தை நினைவுகூறும் வகையில், மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil deogarh for the first opendefecationfree district in odisha
தியோகார் - ஒடிசாவின் முதல் திறந்தவெளி கழிப்பிடமில்லா மாவட்டம்; மணல் சிற்பம் வைத்து வாழ்த்து...!


ஸ்வட்ச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்தது. அதன்படி, நாடு முழுவதும் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களைக் கொண்டு தொடர்ந்து மக்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக திறந்தவெளி கழிப்பிடமில்லா கிராமங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றன.

தொடர் முயற்சியின் விளைவாக, ஒடிசா மாநிலம் தியோகார் மாவட்டம் திறந்தவெளி கழிப்பிடமில்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். அதில் கழிப்பிடம் ஒன்றை செதுக்கி, அதன் கீழ் தியோகாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

SandArt at Puribeach with message Congratulations to #Deogarh for the first #OpenDefecationFree District in Odisha.

அடுத்த செய்தி