ஆப்நகரம்

விவசாயிகளை கவனிக்காத மோடிக்கு 68 பைசா பரிசாக அளித்து ஆர்.எஸ்.எஸ்.எஸ் கிண்டல்

விவசாயிகளின் பிரச்னையை கவனிக்காத மோடிக்கு ராயல்சீமாவை சேர்ந்த விவசாயிகள் அமைப்பு 68 பைசா பரிச்சுதொகை அனுப்பி கிண்டல் செய்துள்ளனர்.

TOI Contributor 17 Sep 2017, 2:42 pm
ராயல்சீமா : விவசாயிகளின் பிரச்னையை கவனிக்காத மோடிக்கு ராயல்சீமாவை சேர்ந்த விவசாயிகள் அமைப்பு 68 பைசா பரிச்சுதொகை அனுப்பி கிண்டல் செய்துள்ளனர்.
Samayam Tamil desperate rayalaseema farmers send pm modi the only gift they can afford 68 paise each
விவசாயிகளை கவனிக்காத மோடிக்கு 68 பைசா பரிசாக அளித்து ஆர்.எஸ்.எஸ்.எஸ் கிண்டல்


தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பல மாதங்களாக போராடி வருகின்றனர். இருப்பினும் அதற்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல், போராட்டம் நீடித்து வருகின்றது.

இந்த வகையில் ஆந்திராவில் உள்ள ராயல்சீமாவில் உள்ள விவசாயிகள், சரியான நீர்பாசன வசதி இல்லாததால் வறட்சியில் வாடுகின்றனர். ஆந்திர பிரதேச மறு நிர்வாக சட்டம் 2004ன் படி பின் தங்கிய பகுதிகளுக்கு நிதி ஒதுக்கு நீர் பாசனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது. ஆனால் அதை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.

இதனால் மிகவும் அதிருப்தியில் உள்ள விவசாயிகள் ராயலசீமா சகுநீதி சாதன சமிதி (ஆர்.எஸ்.எஸ்.எஸ்) எனும் அமைப்பின் மூலம் ஏறத்தால ஆயிரம் விவசாயிகளிடமிருந்து, தலா 68 பைசாவுக்கு காசோலை பெற்று 68வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமருக்கு அனுப்பியுள்ளனர்.
மத்திய பிரதேசத்திலும், ஒடிசாவிலும் சிறப்பு வளர்ச்சி திட்டங்களை அமல் செய்திருக்கும் மத்திய அரசு, ஏன் ஆந்திராவை கண்டு கொள்ளவில்லை என்பது அவசியமான கேள்வி.

இதைப்பார்த்தாவது விவசாயிகளின் பிரச்னையை மத்திய அரசு கண்டுகொள்ளுமா என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடுத்த செய்தி