ஆப்நகரம்

களைகட்டும் சபரிமலை சீசன்: அய்யப்பன் வருமானம் எவ்வளவு தெரியுமா?

சபரிமலையில் சுமார் 30 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 27 Dec 2022, 8:55 am
சபரிமலை அய்யப்பன் கோயிலில் 39 நாள்களில் மட்டும் ரூ.222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 வருமானம் கிடைத்துள்ளது
Samayam Tamil Sabarimala


கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலை அய்யப்பன் கோயிலை நோக்கி பக்தர்கள் அதிகளவில் படையெடுக்க தொடங்கி விடுவார்கள். இந்த ஆண்டு சீசனிலும் நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சீசனில் வரலாறு காணாத கூட்டம் சபரிமலையில் அலைமோதி வருகிறது.
பொங்கல் பரிசு: இன்று முதல் பணிகள் தொடக்கம்! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!
சபரிமலை சீசனின் முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை - 27 டிசம்பர்) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இன்று நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். காலை 11 மணிக்கு களபாபிஷேகம் முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் அய்யப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும்.

பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜைகளுக்கு பின் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜை நிறைவு பெறும்.

இதனால் தங்க அங்கியை சன்னிதானத்துக்கு கொண்டு வருவதை முன்னிட்டு இன்று பிற்பகலில் 18ஆம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை.
எடப்பாடி எடுக்கும் முக்கிய முடிவு: டெல்லிக்கு ஷாக் கொடுக்க பிளான்!
பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 30ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறும்.

தொடர்ந்து சன்னிதானம் விருந்தினர் மாளிகையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு 39 நாட்களில் (டிசம்பர் 25 வரை) சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ரூ.222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 வருமானம் கிடைத்துள்ளது. இதில் காணிக்கையாக ரூ.70 கோடியே 10 லட்சத்து 81 ஆயிரத்து 986 வசூலானது. மேலும் 29 லட்சத்து 8 ஆயிரத்து 500 பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் குழந்தைகள்” என்று கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி