ஆப்நகரம்

சசிகலாவுக்கு சலுகை அளித்த சத்ய நாராயணாவுக்கு புதிய பதவி! - இன்றுடன் ஓய்வு

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் 2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு சலுகை அளித்ததாக எழுந்த புகாரில் சிக்கிய டிஜிபி சத்ய நாராயணனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

TNN 1 Aug 2017, 11:14 am
பெங்களூர் : பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் 2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு சலுகை அளித்ததாக எழுந்த புகாரில் சிக்கிய டிஜிபி சத்ய நாராயணனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil dgp sathya narayana retired today
சசிகலாவுக்கு சலுகை அளித்த சத்ய நாராயணாவுக்கு புதிய பதவி! - இன்றுடன் ஓய்வு


சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க டிஜிபி லஞ்சம் பெற்றுக்கொண்டார் என சிறைத்துறை அதிகாரியாக இருந்த டிஐஜி ரூபா புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து ரூபா சிறைத்துறையிலிருந்து போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார். சத்ய நாராயணன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். இன்று அவர் ஓய்வு பெறுவதால் அவரை காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட முடியாது என்பதால் அவருக்கு புதிய பதவி வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

அதன் படி சத்ய நாராயணாவுக்கு தீயணைப்பு மற்றும் ஊர்காவல்படைப் பிரிவில், டிஐஜி பொறுப்பில் பொது கமாண்டோவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று காலை பதவியேற்ற சத்ய நாராயாணா இன்று மாலையே ஓய்வு பெறுகிறார்.

அடுத்த செய்தி