ஆப்நகரம்

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகை : காத்திருப்போர் பட்டியலில் டிஜிபி சத்யநாராயணராவ்

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்ட விவகாரத்தில் குற்றசாட்டுகளுக்குள்ளான டிஜிபி சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

TNN 17 Jul 2017, 4:18 pm
Samayam Tamil dgp sathyanarayana sent on leave
சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகை : காத்திருப்போர் பட்டியலில் டிஜிபி சத்யநாராயணராவ்
பெங்களூர்: சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்ட விவகாரத்தில் குற்றசாட்டுகளுக்குள்ளான டிஜிபி சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவுக்கு சிறை துறை அதிகாரிகள் சிறப்பு சலுகை அளித்துள்ளனர். இதற்காக சசிகலா தரப்பில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர் என்று டிஜிஜி ரூபா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது இந்திய அரசியலில் பெருத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான புகாரில் சிக்கிய சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபியாக, ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றிய சிறைத்துறைக்கு என்.எஸ்.மேக்ரிக் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போல ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டு வந்த டிஐஜி ரூபாவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரூபாவுக்கு சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையராக கர்நாடக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி