ஆப்நகரம்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒத்துழைப்பு தேவை: மாற்றி மாற்றிப் பேசும் மத்திய அமைச்சர்

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசும் மக்களும் ஒத்துழைப்பு தேவை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TNN 27 Mar 2017, 3:16 pm
டெல்லி: நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசும் மக்களும் ஒத்துழைப்பு தேவை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil dharmendra pradhan asks for support to implement hydrocarbon project in neduvasal
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒத்துழைப்பு தேவை: மாற்றி மாற்றிப் பேசும் மத்திய அமைச்சர்


புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வழிவகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று டெல்லியில் கையெழுத்தானது.

31 நிறுனங்களுடன் மத்திய அரசு இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜெம் லெபாரெட்ரிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான், தமிழகத்தின் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு மற்றும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு தேவை. இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் மட்டுமே கையெழுத்தாகியுள்ளது. நடைமுறைப்படுத்த நெடுநாட்கள் ஆகும். ஏற்கெனவே, ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி