ஆப்நகரம்

சொந்த தேவைக்கு அரசு பணத்தை பயன்படுத்துகிறாரா ஜெகன் மோகன் ரெட்டி?

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த பயணங்களுக்கு அரசு நிதி ஒதுக்குவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுவரை தான் அரசு பணத்தை நேர்மையாக செயல்படுவதாகவும், அரசுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஜெகன் தெரிவித்தது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Samayam Tamil 2 Aug 2019, 2:31 pm
ஆந்திராவில் நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி இமலாய வெற்றியை பெற்றது. இதனையடுத்து அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்றார்.
Samayam Tamil jagan mohan reddy


இதனைத் தொடர்ந்து அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி சொந்த பயணமாக இஸ்ரேலின் ஜெருசலம் நகருக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையுமான ராஜசேகர ரெட்டி, வருடத்துக்கு ஒருமுறை ஜெருசலேம், இஸ்ரேல் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார். தன் தந்தையைப் பின்பற்றி, தற்போது ஜெகனும் ஜெருசலேம் சென்றுள்ளார். நான்கு நாள் பயணமாகத் தன் குடும்பத்துடன் நேற்று புறப்பட்டுச்சென்ற அவர், அந்நாட்டில் உள்ள பல புனிதத் தலங்களுக்குச் செல்ல உள்ளார். ஆந்திர முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ஜெகன் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது.


ஜூலை 26-ம் தேதி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன் சொந்தப் பயணத்துக்காக ஜெருசலேம் செல்ல உள்ளதாக முதலில் அரசு அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து அதே நாளில், ‘முதல்வரின் பயணத்தை ஒட்டி, ஆந்திர காவல்துறை கண்காணிப்பாளர் சிவராஜ் செந்தில் குமார், இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ஜெருசலேம் செல்ல வேண்டும்’ என மற்றொரு அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கிடையில், ஜூலை 31-ம் தேதி, ஆந்திர பொதுத்துறை ‘ஆந்திர முதல்வர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 4-ம் தேதிவரை ஜெருசலேம் செல்ல உள்ளார். அந்தப் பயணத்தில், அவரின் பாதுகாப்புக்காக 22,52,500 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
’சிங்கம் போட்டால் சிங்கக்குட்டி, வேறொன்று குட்டி போட்டால்...?’- செந்தில்போல டவுட் கேட்ட ராஜேந்திர பாலாஜி

ஆகஸ்ட் 1 முதல் 4-ம் தேதிவரை ஜெருசலம் பயணத்தில் இருப்பார் என்றும், 5ம் தேதி டெல்லி திரும்பும் ஜெகன் மோகன், மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 15க்கு மேல் சொந்தகாரணங்களுக்காக ஜெகன் மோகன் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஜெகன் மோகனின் ஜெருசலம் பயணத்துக்கு ரூ.22.52 லட்சத்தை ஆந்திர அரசு ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

நாட்டிலேயே கெத்து காட்டி ”டாப் ஸ்டார்” ஆன தமிழ்நாடு - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி அவரது குடும்பத்துடன் செல்லும் சொந்த பயணங்களுக்கு அரசு நிதி ஒதுக்குவது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சியைச் சேர்ந்த லங்க தினகர், அரசு கருவூலத்தின் மீது தேவையற்ற சுமை இது என தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்டமாக உயர்ந்த பாஜக; குப்புற கவிழ்ந்த காங்கிரஸ் - அதுவும் இந்த விஷயத்துல!

முன்னதாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஜெருசலம் பயணம் குறித்து தகவல் வெளியிட்ட ஆந்திர அரசு, இது முதலமைச்சரின் தனிப்பட்ட பயணம். இதற்கான முழு செலவையும் அவரே ஏற்பார் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி