ஆப்நகரம்

ஜம்முவில் சி.ஆர்.பி.எப் ஜவான்களுக்கு வான்வழி பயணச் சேவை மறுப்பா? மத்திய அரசு விளக்கம்!

வான்வழியாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் அழைத்துச் செல்லப்படுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படும் சம்பவத்திற்கு அரசு விளக்கம் அளித்துள்ளது.

TIMESOFINDIA.COM 17 Feb 2019, 9:51 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே சி.ஆர்.பி.எப் வீரர்கள் பயணித்த வாகனங்கள் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து கேள்வி எழும்பியுள்ளது. இதற்கிடையில் ஜம்மு - ஸ்ரீநகர் பகுதியில் ஹெலிகாப்டர்கள் மூலம் சி.ஆர்.பி.எப் வீரர்கள் அனுப்பப்பட அரசு அனுமதி மறுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
Samayam Tamil CRPF


இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் வான்வழி சேவையை விரிவாக்கம் செய்து வருகிறோம். சாலை வழியாக கான்வாயில் வீரர்கள் பயணிப்பது சில செயல்பாட்டு காரணங்களுக்காக நடைபெற்று வருகிறது. இது தேவைப்படும் நேரங்களில் தொடர்ந்து நடைபெறும்.

இதேபோல் ராணுவத்தினரும் உரிய நேரங்களில் கான்வாயில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சி.ஏ.பி.எப் வீரர்கள், விடுமுறைக்குச் செல்லவும், மீண்டும் பணிக்குத் திரும்பவும் வான்வழி சேவை பெருமளவு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு, காஷ்மீர், ஸ்ரீநகர் பகுதிகளிலும் சி.ஏ.பி.எப் வீரர்களுக்கு வான்வழிச் சேவை அளிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டைக் காட்டிலும், 2018ல் டெல்லி-ஜம்மு,ஸ்ரீநகர்-ஜம்மு-டெல்லி(வாரத்திற்கு 7 விமானங்கள்) மற்றும் ஸ்ரீநகர்-ஜம்மு-ஸ்ரீநகர்(வாரத்திற்கு 4 விமானங்கள்) அளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எப் வீரர்களுக்கு தேவைப்படும் போது வான்வழிச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஜனவரி 2019 முதல் சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. ஆனால் சில ஊடகங்கள் சி.ஆர்.பி.எப் வீரர்கள் வான்வழி பயணத்திற்காக உள்துறை அமைச்சகத்தை அணுகியதாகவும், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இது முற்றிலும் தவறான செய்தி என விளக்கம் அளித்துள்ளது.

அடுத்த செய்தி