ஆப்நகரம்

அரசு சொன்னால் அப்படியே செய்வேன்: டிஐஜி ரூபா புதிர் பேட்டி

பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்படும் சலுகைகளை அம்பலப்படுத்தியதால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து டிஐஜி ரூபா கர்நாடக அரசின் உத்தரவை மதித்து செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

TNN 18 Jul 2017, 3:01 pm
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்படும் சலுகைகளை அம்பலப்படுத்தியதால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து டிஐஜி ரூபா கர்நாடக அரசின் உத்தரவை மதித்து செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.
Samayam Tamil dig roopa has no contempt over transfer
அரசு சொன்னால் அப்படியே செய்வேன்: டிஐஜி ரூபா புதிர் பேட்டி


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பல ஆடம்பர வசதிகள் செய்துதரப்படுவதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் இதற்காக ரூ.2கோடி வரை லஞ்சம் பெற்றதாகவும் கர்நாடக சிறைத்துறை டிஐஜி பொறுப்பில் இருந்த ரூபா புகார் கூறினார்.

அநியாத்தை அம்பலப்படுத்தியதன் எதிரொலியாக வழக்கம் போல சிறைத்துறையில் டிஐஜி பொறுப்பில் இருந்து, போக்குவரத்து துறைக்கு ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டார் ரூபா.

இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்த ரூபா, அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு அரசுக்கு எல்லா அதிகாரமும் உண்டு என்றும் அரசின் உத்தரவை மதித்து செயல்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பணி மாற்றத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தெரிவித்திருக்கிறார்.

அடுத்த செய்தி