ஆப்நகரம்

நேர்மை அதிகாரி டிஐஜி ரூபாவுக்கு ஆதரவாக களமிறங்கிய சிறைக் கைதிகள்

டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

TNN 17 Jul 2017, 5:26 pm
பெங்களூர் : டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
Samayam Tamil dig roopa transferred prisoners protest
நேர்மை அதிகாரி டிஐஜி ரூபாவுக்கு ஆதரவாக களமிறங்கிய சிறைக் கைதிகள்


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவுக்கு சிறை துறை அதிகாரிகள் சிறப்பு சலுகை அளித்துள்ளனர். இதற்காக சசிகலா தரப்பில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர் என்று சிறைதுறை டிஜிஜி இருந்த ரூபா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதனையத்து கர்நாடக அரசு சிறைதுறை டிஜிஜி இருந்த ரூபா பணியிட மாற்றம் செய்து இன்று உத்தரவிட்டது. ரூபாவுக்கு சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையராக கர்நாடக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். ரூபா பணியில் சேர்ந்ததில் இருந்து இதுவரை அவர் 31 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சிறையில் நேர்மையாக செயல்பட்ட அதிகாரி ரூபாவை பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் , ரூபாவை மீண்டும் சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக நியமிக்க வேண்டும் என்று சிறை னகைதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி