ஆப்நகரம்

ஆதார் எண்ணை வெளியிட்டால் ஆபத்து இல்லை: ட்ராய் தலைவர்

ஆதார் எண்ணை வெளியிடுவதால் ஆபத்தை அதிகரித்துவிடாது என்று ட்ராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Aug 2018, 6:32 pm
ஆதார் எண்ணை வெளியிடுவதால் ஆபத்தை அதிகரித்துவிடாது என்று ட்ராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rs_sharma_660_072918044714_073118062151


ட்ராய் (TRAI) எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா. இவர் அண்மையில் தனது ஆதார் எண்ணை வெளியிட்டு, ஆதார் பாதுகாப்பானதுதான் என்று சவால் விடுத்தார். இதனையடுத்து பிரெஞ்சு இணைய பாதுகாப்பு ஆய்வாளர் எலியட் அல்டர்சன் என்பவர் அவரது வாட்ஸ்அப் எண் உள்ளிட்ட பல அந்தரங்கத் தகவல்களை வெளியிட்டார்.

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆதார் எண்ணை வெளியிட்டு சவால் விட வேண்டாம் என்று ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஆர்.எஸ்.சர்மா மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

“ஆதார் எண்ணை வெளியிடுவதாலேயே இணையதளங்கள் வாயிலாக ஏற்படும் ஆபத்துக்கான வாய்ப்பு அதிகரித்துவிடாது.” என்று குறிப்பிட்டுள்ள அவர், மற்றவர்களையும் என்னைப்போல் ஆதார் எண்ணை வெளியிடுமாறு நான் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி