ஆப்நகரம்

DMK: சிதம்பரம் கைதும்...டெல்லியியை கலக்க இருக்கும் திமுக போராட்டமும்...!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்பு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்கக் கோரி இன்று திமுக எம்.பி., டி.ஆர். பாலு தலைமையில் டெல்லியில் போராட்டம் நடக்கிறது.

Samayam Tamil 22 Aug 2019, 12:49 pm
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 360 ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரித்தனர்.
Samayam Tamil Stalin D


இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு வெற்றி பெற்றது. இதையடுத்து ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தும் அரசாணை வெளியிட்டு இருந்தார்.

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களான ஓமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

Chennai Day Wishes Images: 'மெட்ராஸ் டே'க்கு எப்படியெல்லாம் வாழ்த்தலாம்? இதோ சூப்பர் ஐடியா..

இவர்கள் மட்டுமின்றி பிரிவினைவாதத் தலைவர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு என்று சிறப்பு சலுகைகள் வழங்கப்படவில்லை. இணையதளம் ரத்து செய்யப்பட்டது. இதை பரூக் அப்துல்லா கண்டித்து இருந்தார்.

இவர் சிறை வைக்கப்பட்டு இருந்த காரணத்தால், சென்னையில் நடந்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்தார்.

380th birthday to Madras : நம்ம சென்னை பிறந்து வளர்ந்த கதை....!!

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும் டெல்லியில் திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று டெல்லியில் திமுக சார்பில் போராட்டம் நடக்கிறது. திமுக எம்.பி., டி ஆர். பாலு தலைமையில் இந்த போராட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் கலந்து கொள்கின்றனர்.

’மெட்ராஸ் டே’ தினத்தை கொண்டாடும் சிறப்பு நிகழ்ச்சிகளின் பட்டியல்- மறக்காம கலந்துக்கோங்க...!

இதற்காக ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நேற்று இரவு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் ப. சிதம்பரத்திடம் இன்றும் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இந்தப் போராட்டம் நடக்கிறது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.,யும், சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் டெல்லி செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறினார். ஆதலால் இந்தப் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி