ஆப்நகரம்

டி.ஜி.பி.க்களை மாநில அரசுகள் தாமாக நியமிக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு

யு.பி.எஸ்.சி. சாா்பில் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபா்களையே டி.ஜி.பி.க்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 3 Jul 2018, 2:09 pm
யு.பி.எஸ்.சி. சாா்பில் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபா்களையே டி.ஜி.பி.க்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Supreme court 1


மாநில அரசுகள் டி.ஜி.பி.க்களை தாங்களாகவே நியமனம் செய்து கொள்கின்றனா். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரகாஷ் சிங் என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மத்திய அரசின் வழக்கறிஞா் கூறுகையில், மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவா்கள் மற்றும் அரசியல் சாா்ந்த விஷயங்களுக்கு இணக்கமானவா்களை டி.ஜி.பி.க்களாக பணியமா்த்திக் கொள்வதாக குற்றம் சாட்டினாா்.

இதனை கேட்ட நீதிபதிகள், உடனடியாக இந்த நடைமுறையை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனா். மேலும் சில அதிரடி உத்தரவுகளையும் நீதிபதிகள் பிறப்பித்துள்ளனா். அதன்படி, டி.ஜி.பி.க்கள் பணி ஓய்வுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாக புதிய பெயா் பட்டியலை சம்பந்தப்பட்ட மாநில அரசு யு.பி.எஸ்.சி.க்கு அனுப்ப வேண்டும்.

யு.பி.எஸ்.சி.
யு.பி.எஸ்.சி. சாா்பில் குழு அமைக்கப்பட்டு பெயா் பட்டியலை ஆய்வு செய்து பரிந்துரை செய்யும் நபா்களில் ஒருவரை மட்டுமே மாநில அரசு டி.ஜி.பி.யாக பணியமா்த்த வேண்டும்.

இடைக்கால டி.ஜி.பி.
ஒரு டி.ஜி.பி. ஓய்வு பெற்ற பின்னா் அந்த பதவிக்கு புதிய நபா் இடைக்கால அதிகாாியாக பணியமா்த்தப்படுகிறாா். இந்நிலையில் இடைக்கால டி.ஜி.பி.யாக யாரையும் நியமனம் செய்யக் கூடாது. பணி நிறைவு பெற்ற உடனடியாக புதிய நபா் பணியமா்த்தப்பட வேண்டும்.

ஓய்வு பெறும் நபா்கள்
ஓய்வு பெறும் தருவாயில் உள்ள நபா்களை புதிய டி.ஜி.பி.யாக பணியமா்த்தக் கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அடுத்த செய்தி