மகாராஷ்டிராவில் இருந்து துப்பாக்கியுடன் திருப்பதிக்கு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் சுதாகர் கணபத். இவர் புதன்கிழமை காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்திருக்கிறார். குடும்பத்தினருடன் காரில் வந்த போது அலிபிரி சோதனைச் சாவடியில் அவரது காரில் சோதனையிடப்பட்டது.
அப்போது காரில் ஒரு துப்பாக்கி, 6 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. துப்பாக்கி உரிமைத்தைக் கேட்டபோது, தன்னிடமிருந்த துப்பாக்கி உரிமத்தை காட்டியுள்ளார் சுதாகர்.
ஆனால், இந்த உரிமம் மகாராஷ்டிர மாநிலத்துக்குள் மட்டுமே செல்லுபடியாகும். மற்ற மாநிலங்களில் துப்பாக்கியை பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் சுதாகரன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, அவரது மகன் தனது சட்டைப் பையில் வைத்திருந்த 8 தோட்டாக்களை அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் வீசியதைப் பார்த்த போலீசார் அவற்றையும் கைப்பற்றினர்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் சுதாகர் கணபத். இவர் புதன்கிழமை காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்திருக்கிறார். குடும்பத்தினருடன் காரில் வந்த போது அலிபிரி சோதனைச் சாவடியில் அவரது காரில் சோதனையிடப்பட்டது.
அப்போது காரில் ஒரு துப்பாக்கி, 6 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. துப்பாக்கி உரிமைத்தைக் கேட்டபோது, தன்னிடமிருந்த துப்பாக்கி உரிமத்தை காட்டியுள்ளார் சுதாகர்.
ஆனால், இந்த உரிமம் மகாராஷ்டிர மாநிலத்துக்குள் மட்டுமே செல்லுபடியாகும். மற்ற மாநிலங்களில் துப்பாக்கியை பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் சுதாகரன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, அவரது மகன் தனது சட்டைப் பையில் வைத்திருந்த 8 தோட்டாக்களை அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் வீசியதைப் பார்த்த போலீசார் அவற்றையும் கைப்பற்றினர்.