ஆப்நகரம்

சிறப்பு... பிறந்த குழந்தையை பைக்கில் கொண்டு போய் காப்பாற்றிய மருத்துவர்

பிறந்த குழந்தையின் உயிரை சமயோசிதமாக வினையாற்றி காப்பாற்றிய மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்னம் இருக்கின்றன.

Samayam Tamil 13 Apr 2020, 12:30 pm
மருத்துவர்கள் இந்த சமயத்தில் மருத்துவத்தைத் தாண்டி பல கோணங்களில் பணி புரிய வேண்டிய தேவை இருக்கிறது. இந்நிலையில் மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் குழந்தை ஒன்றன் உயிரைக் காப்பற்றுவதற்காக தனது பைக்கை ஆம்புலன்ஸாக மாற்றி தானே டிரைவராகவும் மாறியிருக்கிறார் ஒரு மருத்துவர்.
Samayam Tamil doctor turned into ambulance driver in maharashtra saved newborn life
சிறப்பு... பிறந்த குழந்தையை பைக்கில் கொண்டு போய் காப்பாற்றிய மருத்துவர்


மும்பை அருகிலுள்ள அலிபாக் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார் மருத்துவர் ராஜேந்திர சந்தோர்க்கர். இவரது மருத்துவமனியில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைக்கு அவசரமாக தீவிர சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், இவரது மருத்துவமனையில் அதற்கான வசதிகள் இல்லை.

அருகில் சுமார் 1.5 கி.மீ தூரத்தில் இருக்கும் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அமுடிவெடுத்த மருத்துவர் ஆம்புலன்சுக்காக காத்திருப்பதை விட தனது பைக்கில் செல்வது உகந்தது என்று முடிவெடுத்தார்.

குழந்தையின் உறவினரும், செவிலியருமான 28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பின்னே அமர்ந்து குழந்தயை பத்திரமாகப் பிடித்துக் கொள்ள பைக்கில் கொண்டு சென்று குழந்தை காப்பாற்றப்பட்டது. (படத்தைப் பார்க்க)



வெறும் 2.9 கிலோ எடையுள்ள பிறந்து குழந்தை மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு, சையனஸ் பிரச்சினையும் இருந்ததால் சிரமம் அதிகமாகி உடல் நீல நிறத்தில் மாறியது. இதனையடுத்துத்தான், நிலைமை மோசமாவதை உணர்ந்த மருத்துவர் தனது பைக்கில் குழந்தையை கொண்டு சென்றுள்ளார்.

ஊரடங்கு மட்டும் இல்லைனா இந்தியாவின் கதி? கொரோனா பற்றி ’ஷாக்’ ரிப்போர்ட்!

32 வயதான இந்தக் குழந்தையின் தாய் ஒரு பள்ளி ஆசிரியர். அவரது உடல்நிலையும் மோசமாகத்தான் இருந்தது. காரணம், குறித்த தேதிக்கு 10 நாட்கள் முன்னரே பிரசவமாகியிருந்தது அதுவும் அறுவை சிகிச்சை வாயிலாக.

பிறந்த குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக தேவைப்படும் திவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 12 நேரத்திற்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. இந்த 12 மணி நேர சிகிச்சைக்குப் பின்னர் குழந்தையின் உடல்நிலை சீரானது என்றார் திடீரென ஆம்புலன்ஸ் டிரைவராகவும் மாறிய மருத்துவர் ராஜேந்தர்.

பிறந்த குழந்தையின் உயிரை சமயோசிதமாக வினையாற்றி காப்பாற்றிய மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்னம் இருக்கின்றன.

அடுத்த செய்தி