ஆப்நகரம்

அதிகரிக்கும் நுரையீரல் தொற்று; டெல்லிக்கு குட்பை சொல்லும் சோனியா காந்தி!

சோனியா காந்திக்கு நுரையீரல் பாதிப்பு அதிகரித்து வருவதால் காற்று மாசுபாடுள்ள டெல்லியில் இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Nov 2020, 2:24 pm
காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்து வருபவர் சோனியா காந்தி. இவருக்கு வயது 73. வயது மூப்பின் காரணமாக தனது மகன் ராகுல் காந்தியிடம் கட்சி பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் அவர் மக்களவை தேர்தல் தோல்வியால் துவண்டு போனார். பின்னர் சரியான தலைமை இல்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த சூழலில் காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரை தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
Samayam Tamil Sonia Gandhi


அதுவரை செயல் தலைவராக சோனியா நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சோனியா காந்திக்கு நுரையீரல் தொற்று அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதுவும் டெல்லியில் காணப்படும் காற்று மாசுபாடு சோனியாவின் ஆஸ்துமா, நுரையீரல் தொற்று ஆகியவற்றை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே டெல்லியில் காற்று மாசுபாடு குறையும் வரை வேறு நகரங்களில் தங்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உலகிலேயே முதல்முறை; செம சர்ப்ரைஸ் கொடுத்த திருப்பதி!

எனவே அடுத்த சில நாட்களில் கோவா அல்லது சென்னைக்கு இடமாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார்.

அதன்பிறகு செப்டம்பர் 12ஆம் தேதி வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். அவருடன் ராகுல் காந்தியும் உடன் சென்றிருந்தார். இதனால் இருவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி