ஆப்நகரம்

கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை எட்டிவிட்டதா? - என்ன சொல்கிறது மத்திய அரசு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறவில்லை. எனவே இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 10 Apr 2020, 6:31 pm
இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 9) மாலை 5 மணியில் இருந்து கடந்த 24 மணிநேர நிலவரப்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 5,865 ஆக இருந்தது.
Samayam Tamil india corona


இந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களிடமிருந்து நேற்று மட்டும் மொத்தம் 16,002 பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. இவற்றை சோதனை செய்ததில் மொத்தம் 320 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவுக்கு 33 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

1.7 கோடி பாதுகாப்பு உபகரணங்கள், 50 ஆயிரம் வென்ட்டிலேட்டர்கள்: கொரோனாவை எதிர்கொள்ள தயாராகும் மத்திய அரசு!!

அதேசமயம் கொரோனா சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தோர் எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளதாகவும், தற்போது மொத்தம் 6,039 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகள் நமக்கு ஒரு கோடி அளவுக்கு தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நம்மிடம் 3.28 கோடி மாத்திரைகள்
கைவசம் உள்ளன என்றும் அவர் கூறினார்.

முக்கியமாக, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதன் மூன்றாம் நிலையான சமூக பரவலை எட்டவில்லை.

காட்டு வழியில் 1400 கி.மீ. த்ரில் பயணம்: மகனுக்காக தாய் செய்த சாகசம்

அதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். அதேசமயம் தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை இணையமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 101 பேரில், 27 பேர் எவ்வித வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொள்ளாதவர்கள்.

எனவே, பஞ்சாபில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதா என்ற அச்சம் எழுவதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி