ஆப்நகரம்

தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பற்றிய 4 பேர்

ஹைதராபாத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடி வந்த நாயை மிகவும் ஆபத்தான நிலையில் 4 பேர் காப்பாற்றியுள்ளனர்.

TNN 8 Oct 2017, 2:16 am
ஹைதராபாத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடி வந்த நாயை மிகவும் ஆபத்தான நிலையில் 4 பேர் காப்பாற்றியுள்ளனர்.
Samayam Tamil dog saved by 4 men in hyderabad telangana musi river floods
தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பற்றிய 4 பேர்


தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கடந்த 2ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதியின் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது.



மழை நீரில் செல்ல முடியாமல் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்பு பகுதிகள், அலுவலகங்கள் அனைத்திலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் என்ன செய்வதென்று திகைத்துப் போயினர். கடந்த மாதம் மும்பையில் பெய்த மழையைக் காட்டிலும் ஹைதராபாத்தில் ஒரே நாளில் கனமழை வெளுத்துக் கட்டியது.

இந்த நிலையில், ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நாய் உயிருக்கு போராடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கண்டுள்ளனர். உடனே அவர்கள் மிகவும் கஷ்டத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நாயை மீட்டனர். தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மனிதாபிமானத்துடன் நாயின் உயிரை காப்பாற்றிய இவர்களின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி