ஆப்நகரம்

உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு; இனிமே கவலையில்லை!

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையில் மேலும் தளர்வை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 12 Nov 2020, 8:34 am
கொரோனா வைரஸ் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு மே 25ஆம் தேதி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. போதிய இடைவெளி விட்டு அமரும் வகையில் உள்நாட்டு விமானச் சேவையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அதாவது 33 சதவீத பயணிகள் மட்டும் விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 26ஆம் தேதி பயணிகளின் எண்ணிக்கை 45 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 2ஆம் தேதி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
Samayam Tamil Domestic Flights in India


இந்நிலையில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு மேலும் சலுகை அளிக்கும் வகையில் 70 சதவீத பயணிகளை அனுமதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு உள்நாட்டு விமான சேவையில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரிகள் திடீர் மூடல்; இன்னும் எத்தனை நாட்கள்? மாநில அரசு புதிய தகவல்!

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக பண்டிகை காலத்தை ஒட்டி உள்நாட்டு விமான சேவைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். ஒவ்வொரு நாளும் வான்வெளி போக்குவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. பயணிகளின் வருகை அதிகரிப்பதை ஒட்டி போக்குவரத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் நாட்களில் உள்நாட்டு விமான சேவையில் 70 முதல் 75 சதவீதம் வரை பயணிகள் அனுமதிக்கப்படுவர். இதுதொடர்பாக புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த சூழலில் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, உள்நாட்டு விமான சேவையில் கடந்த மே 25ஆம் தேதி முதல் 30 ஆயிரம் பயணிகள் வரை பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இது நவம்பர் 8ஆம் தேதி நிலவரப்படி 2.06 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வருவதைக் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கையை 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி