ஆப்நகரம்

ட்ரம்ப், மெலானியாவை உருகவைத்த தாஜ்மஹால்!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் கண்டு ரசித்தார்.

Samayam Tamil 24 Feb 2020, 8:17 pm
இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக டொனால்ட் ட்ரம்ப் இன்று இந்தியா வந்துள்ளார். குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் இன்று மதியம் நடைபெற்ற "நமஸ்தே ட்ரம்ப்" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பங்கேற்றார்.
Samayam Tamil தாஜ்மஹாலின் அருமை, பெருமைகளை அறிந்து வியந்த ட்ரம்ப்


இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றி பார்ப்பதற்காக, ட்ரம்ப் தனது குடும்பத்துடன் டெல்லி ஆக்ராவுக்கு விமானத்தில் புறப்பட்டார்.

மாலை 4:45 மணியளவில் ஆக்ரா வந்தடைந்த அவர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தமது மனைவி மெலானியாவுடன் மாலை நேர சூரியஒளியில் தாஜ்மஹாலின் அழகை கண்டு ரசித்தார்.

உலகின் பிரம்மாண்ட ஸ்டேடியத்தில் “நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சி- ட்ரம்ப் உரையின் சிறப்பம்சங்கள்!

அப்போது தாஜ்மஹாலின் அருமை, பெருமைகளை சுற்றுலா வழிகாட்டி ட்ரம்பிடம் சொல்ல, சொல்ல அந்த தகவல்களை கேட்டு ட்ரம்ப் வியப்படைந்தார். மனைவி மெலானியாவுடன் அவர் தாஜ்மஹாலில் புகைப்படமும் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தார்.

இவரை போன்றே, ட்ரம்பின் மகளான இவாங்காவும், தனது கணவர் ஜாரெட் குஷ்னருடன் தாஜ்மஹாலை கண்டு களித்தார். அத்துடன் அங்கு தமது கணவருடனும், தனியாகவும் அவர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, தாஜ்மஹாலில் உள்ள பார்வையாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட டொனால்ட் ட்ரம்ப், "தாஜ்மஹாலை கண்டு வியக்கிறேன்". "தேங்க்யூ இந்தியா" போன்ற வாசகங்களை தமது கைப்பட வருகைப்பதிவேட்டில் எழுதினார்.

தாஜ்மஹாலை பார்வையிட்டபோது, டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி