ஆப்நகரம்

சசிகலாவை விமர்சிக்க கூடாது - மார்கண்டேய கட்ஜு

போதுமான அவகாசம் கொடுக்காமல் சசிகலாவின் ஆட்சி செயல்பாடுகளை விமர்சிக்கக் கூடாது என முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

TNN 13 Feb 2017, 7:12 pm
போதுமான அவகாசம் கொடுக்காமல் சசிகலாவின் ஆட்சி செயல்பாடுகளை விமர்சிக்கக் கூடாது என முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil dont criticize to sasikala markandey katju
சசிகலாவை விமர்சிக்க கூடாது - மார்கண்டேய கட்ஜு


தமிழகத்தில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா இடையே யார் முதல்வர் பதவியை கைப்பற்ற போகிறார்கள் என்ற பிரச்னை சென்று கொண்டிருக்கின்றது

சசிகலாவுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுத்த பின் அவரைப் பற்றி விமர்சிக்கலாம். சசிகலா முதல்வராவதற்கு முன்பே அவர் மீது பல விமர்சனங்களை எழுப்புவது தவறு.

அதே போல் சசிகலா மீதான வழக்கு தீர்ப்பு வெளிவரும் வரை ஆளுநர் காத்திருபதில் எந்த தவறும் இல்லை.

மேலும் ஓ பன்னீர் செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்ட பிறகு அதை மீண்டும் ஓபிஎஸ் திரும்பப் பெற சட்டத்தில் இடமில்லை. இவ்வாறு கட்ஜு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி