ஆப்நகரம்

காவிரி விவகாரத்தை மொழி பிரச்னையாக மாற்ற வேண்டாம்; பொன்.ராதாகிருஷ்ணன்

காவிரி நீர் விவகாரத்தில் போராட்டம் நடத்தும், கன்னட அமைப்புகள் அதனை தமிழ் மக்களுக்கும், தமிழ்மொழிக்கும் எதிரான போராட்டமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

TNN 9 Sep 2016, 2:52 pm
காவிரி நீர் விவகாரத்தில் போராட்டம் நடத்தும், கன்னட அமைப்புகள் அதனை தமிழ் மக்களுக்கும், தமிழ்மொழிக்கும் எதிரான போராட்டமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Samayam Tamil dont try to do anti tamil protest pon radhakrishnan appeals
காவிரி விவகாரத்தை மொழி பிரச்னையாக மாற்ற வேண்டாம்; பொன்.ராதாகிருஷ்ணன்


கர்நாடகாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னட அமைப்புகள், தேவைப்பட்டால் அங்குள்ள தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக, மிரட்டல் விட தொடங்கியுள்ளனர். இது, தமிழர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்ததன் மூலமாக, நதிநீர் விவகாரத்தை மொழி பிரச்னையாக மாற்ற, கன்னட அமைப்புகள் முயற்சித்துள்ளன. இதனை ஏற்க முடியாது என்றும், எந்த மாநிலத்தவராக இருந்தாலும், போராட்டத்தை அமைதியான கோரிக்கை சார்ந்ததாக முன்னெடுக்கும்படியும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பாக, அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி