ஆப்நகரம்

சட்ட தந்தை அம்பேத்கர் நினைவு தினம்;தலைவர்கள் மரியாதை.!

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

TNN 6 Dec 2017, 12:42 pm
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
Samayam Tamil dr ambedkar death anniversary
சட்ட தந்தை அம்பேத்கர் நினைவு தினம்;தலைவர்கள் மரியாதை.!


விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார்.

பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் டெல்லியில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அடுத்த செய்தி