அம்ரோஹா: குடிபோதையில் உயிருடன் இருந்த விஷப்பாம்பை சாப்பிட முயன்றவர் பரிதபமாக உயிரிழந்தார். இதன் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. உத்தர பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர் மஹிபால் சிங். இவர் அதிகமாக மது குடித்திருந்த போது, தெருவில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்புடன் விளையாடியுள்ளார்.
இதைப்பார்த்த அந்த கிராமத்தை சேர்தவர்கள், அவரை கொடிய விஷம் கொண்ட பாம்பை சாப்பிடும் படி தூண்டியுள்ளனர். இதையடுத்து அவரும் அந்த பாம்பை தனது வாயின் அருகே கொண்டு சென்றுள்ளார். அப்போது பாம்பு அவரை கடித்துவிட்டு, கையில் இருந்து நழுவி தப்பிச்சென்றுவிட்டது.
4 மணி நேரத்துக்கு பின்:
இந்நிலையில் இச்சம்பவத்தை சுற்றியிருந்தவர்கள் தங்களின் மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்டுத்தீயை விட வேகமாக பரவியுள்ளது.
இதற்கிடையில் பாம்பை சாப்பிட முயன்ற மஹிபால் சிங், 4 மணி நேரத்துக்கு பின் அவரது வீட்டில் விஷத்தால் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப்பார்த்த அந்த கிராமத்தை சேர்தவர்கள், அவரை கொடிய விஷம் கொண்ட பாம்பை சாப்பிடும் படி தூண்டியுள்ளனர். இதையடுத்து அவரும் அந்த பாம்பை தனது வாயின் அருகே கொண்டு சென்றுள்ளார். அப்போது பாம்பு அவரை கடித்துவிட்டு, கையில் இருந்து நழுவி தப்பிச்சென்றுவிட்டது.
4 மணி நேரத்துக்கு பின்:
இந்நிலையில் இச்சம்பவத்தை சுற்றியிருந்தவர்கள் தங்களின் மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்டுத்தீயை விட வேகமாக பரவியுள்ளது.
இதற்கிடையில் பாம்பை சாப்பிட முயன்ற மஹிபால் சிங், 4 மணி நேரத்துக்கு பின் அவரது வீட்டில் விஷத்தால் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.