ஆப்நகரம்

விமானநிலையத்தில், பெண்ணின் பையின் மேல் உச்சா போன போதை ஆசாமி

கல்கத்தா விமான நிலையத்தில், போதையில் வந்திருந்த பயணி ஒருவர், ஒரு பெண் வைத்திருந்த சாமான்கள் மீது சிறுநீர் கழித்தவரை போலீஸார் கைது செய்தனர்.

TOI Contributor 22 Oct 2016, 3:00 pm
கல்கத்தா : கல்கத்தா விமான நிலையத்தில், போதையில் வந்திருந்த பயணி ஒருவர், ஒரு பெண் வைத்திருந்த சாமான்கள் மீது சிறுநீர் கழித்தவரை போலீஸார் கைது செய்தனர்.
Samayam Tamil drunk man urinates on womans bag at kolkata airport
விமானநிலையத்தில், பெண்ணின் பையின் மேல் உச்சா போன போதை ஆசாமி


ஒடிசாவை சேர்ந்த வர்த்தகர் பிரபாகர் தோரா என்ற நபர் கல்கத்தாவிலிருந்து - சென்னை செல்ல விமான டிக்கெட் எடுத்திருந்தார். பயணத்திற்கு வந்த பிரபாகர் மிகவும் குடித்து விட்டு தள்ளாடியபடி வந்ததால் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். விமான பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்து உங்களை அனுமதிக்க முடியாது என கூறி பயணிகள் காத்திருக்கும் அறையில் அமர வைத்தனர்.

சென்னைக்கு செல்லும் கடைசி விமானம் குறித்து அறிவிப்பு வெளியானது. உடனே பிரபாகரும் சக பயணிகளுடன் சேர்ந்து வரிசையில் நின்றார். அப்போது, வரிசையில் நிற்கும்போது, அனைவரின் முன்னிலையில் இருந்த பெண்ணின் பையின் மீது சிறுநீர் கழித்தார். இதனால் கடுப்பான அந்த பெண் அவர் குறித்து விமான பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து அவரை பிடித்து தனியான ஒரு இடத்தில் அமர வைத்தனர். அதன் பின் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

News Summary:
A trader from Odisha was arrested at Kolkata airport after he urinated on a passenger's luggage on Thursday night.

அடுத்த செய்தி