ஆப்நகரம்

குடிபோதையில் போலீசாரை தாக்கிய பெண்

மும்பையில் குடிபோதையில் இருந்த 21 வயது பெண் 6 போலீசாரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

TOI Contributor 18 Jun 2016, 1:46 pm
மும்பையில் குடிபோதையில் இருந்த 21 வயது பெண் 6 போலீசாரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
Samayam Tamil drunk woman alleged beaten 6 police men and women in worli police station
குடிபோதையில் போலீசாரை தாக்கிய பெண்


மும்பை ஒர்லியில் நேற்று இரவு கார் ஓட்டிச் சென்ற பெண் ஒருவர் நடைபாதை மீது ஏற்றியுள்ளார். இவருடன் மேலும் இருவர் காரில் பயணித்துள்ளனர். இவர்களை ஒர்லி போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்தப் பெண் சரியான பதில் எதுவும் கூறவில்லை. அந்தப் பெண் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த போலீசார் ஆறு பேரையும் அந்தப் பெண் தாக்கினார். பெண் போலீசார் உள்பட மூன்று பேருக்கு கைகளில் காயம் ஏற்பட்டது.

அந்தப் பெண்ணுடன் சேர்த்து மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி