ஆப்நகரம்

திருப்பதி: கொரோனாவை கொல்ல ஏழுமலையான் பக்தர்கள் மீது வேதிப்பொருள் தெளிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு சாமி தரிசன வரிசையில் வைரஸ், பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை கொண்ட உலர் ஓசோன் வேதிப்பொருள் தெளிக்கப்படுகிறது.

Samayam Tamil 8 Jul 2020, 4:23 pm
திருப்பதி திருமலையில் பணியாற்றும் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், போலீசார், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil dry ozone chemical spray on devotees at tirupati
திருப்பதி: கொரோனாவை கொல்ல ஏழுமலையான் பக்தர்கள் மீது வேதிப்பொருள் தெளிப்பு!!


திருப்பதி திருமலைக்கு தற்போது தினமும் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில், அங்கு 50 -க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, பக்தர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது..

இதையடுத்து, மேற்கொண்டு பக்தர்கள், ஊழியர்களுக்கு பெரும் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில், ஏழுமலையானை தரிசிக்க கடைபிடிக்கப்படும் வரிசைகளில் உலர் ஓசோன் வேதிப்பொருளை தெளிக்கும் நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

மேலும், ஏழுமலையான் கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் அனைவர் மீதும் உலர் ஓசோன் தெளிக்கப்படுகிறது. உலர் ஓசோன் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவற்றை முழுமையாக அழிக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி