ஆப்நகரம்

ரேஷன் கடைகளுக்கு கட்டுப்பாடு: கொரோனாவால் வந்த வினை!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ரேஷன் கடைகள் திறந்திருப்பது தொடர்பாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Apr 2021, 2:54 pm
கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் பிற மாநிலங்களைவிட மகாராஷ்டிராவில் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றன.
Samayam Tamil Ration Shop


தடுப்பூசி திருவிழாவை மத்திய அரசு தீவிரப்படுத்திய போதும் அதற்கான பலனை உடனடியாக நேரடியாக பார்க்கமுடியவில்லையே என்ற பேச்சு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஷாக் நியூஸ்: தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது!
பாதிப்பு சில மாநிலங்களில் மட்டுமே மிக வேகமாக அதிகரிப்பதால் நாடு முழுவதற்குமான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்கவில்லை. பாதிப்புகளை பொறுத்து மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் காய்கறி, மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நம்பர் உறுதி: எடப்பாடியை நம்ப வைத்த மூன்று ரிப்போர்ட்!

அதேபோல் ரேஷன் கடைகளும் காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மட்டுமே திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பொருள் வாங்க வெளியில் வரும் நேரத்தை குறைத்து வீட்டிற்குள் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி