ஆப்நகரம்

கொரோனா: சிவபக்தர்களுக்கு பேட் நியூஸ்!!

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 22 Apr 2020, 7:56 pm
ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலுக்கு ஹிந்துக்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
Samayam Tamil amarnath


இந்த குகைக்கோயிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத்துக்கு புனித ப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் இறுதி வாரத்தில் தொடங்கி, 60 நாட்களுக்கு இந்த புனித யாத்திரை மேற்கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அமர்நாத் புனித யாத்திரை: பனிலிங்கத்தை அடைவது எப்படி?

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு அம்சமாக, இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஜம்மு -காஷ்மீரில் திடீரென மாறும் பருவநிலை, தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் யாத்திரை திடீரென ரத்து செய்யப்படுவதோ, ஒத்திவைப்படுவதோ உண்டு.

ஆனால், இந்த முறை கொரோனா அச்சத்தின் காரணமாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சிவபக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி