ஆப்நகரம்

வெளுத்து வாங்கும் மழை சிக்கி தவிக்கும் கேரள மக்கள் !

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அணை திறப்பால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

TNN 18 Sep 2017, 12:35 pm
கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அணை திறப்பால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil due to heavy rain in kerala land slides happened and holiday for schools and colleges
வெளுத்து வாங்கும் மழை சிக்கி தவிக்கும் கேரள மக்கள் !


கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கேராளவில் உள்ள 5 ந்து முக்கிய அணைகள் திறக்கப்பட்டுள்ளன.நெய்யாறு , காருகுட்டி ,மலன்கரா போன்ற முக்கியமான நதிகளில் காட்டாற்று வெள்ள பெருக்கெடுத்து ஓடுகிறது.

பாலக்காட்டைச் சேர்ந்த 8 வயது குழந்தை நிலச்சரிவில் உயிரிழந்துள்ளது. மொத்தம் இதுவரை 3 பேர் மழைக்கு பலியாகியுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை காரணமாக பல்கலைகழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிப்பை முகநூல் மூலம் கேரள முதலமைச்சர் பிரனாய் விஜயன் அறிவித்துள்ளார்.

பாலக்காடு , அட்டப்பாடி , இடுக்கு முதலிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

தொடந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக கேரள மாநிலத்தில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி