ஆப்நகரம்

Kerala: கேரளாவில் கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை, ரயில்கள் ரத்து!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Jul 2018, 9:48 am
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil heavy rain


கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், சூறைக்காற்றால் மரங்கள் முறிந்தன. மேலும், பலத்த காற்று வீசுவதால் மின்கம்பங்கள் சரிந்தது. மழை வெள்ளத்தால் ஆறு, கால்வாய், கழிவநீர் ஒடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கேரளாவில் நான்கு மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள ரயில்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால், கோட்டயம் – ஏற்றுமானூர் இடையே செல்லும் 10 ரயில்களும், எர்ணாகுளம் – புனலூர் இடையே செல்லும் 2 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி