ஆப்நகரம்

“மோடி உறை ஊரடங்கு நீடிப்பு பற்றிதான்” டெல்லி முதல்வர் தகவல்...

நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட ஊரடங்கு நீடிக்கப்படும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 11 Apr 2020, 4:10 pm
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அது வரும் 14ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது. இதற்கிடையே இப்போது நாட்டில் நடத்தப்படும் வைரஸ் கண்டறியும் சோதனைகளில் பலர் நோய்த் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வருகிறது.
Samayam Tamil “மோடி உறை ஊரடங்கு நீடிப்பு பற்றிதான்” டெல்லி முதல்வர் தகவல்...
“மோடி உறை ஊரடங்கு நீடிப்பு பற்றிதான்” டெல்லி முதல்வர் தகவல்...


இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட வேண்டும் எனக் குரல்கள் எழுந்து வந்தது. இது தொடர்பாக நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் மத்திய அரசுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகின.

மத்திய அரசு சார்பாக மக்கள் முன்னிலையில் பிரதமர் இன்று பேசவுள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு மே 1ஆம் தேதி நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு நேற்று அறிவித்தது. இதற்கு முன்பே ஒடிசாவில் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு ஒன்றை பிறபித்தது.

இதற்கிடையே பிரதமருடன் ஆலோசனை நடத்திய தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி, மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகின. இதே கருத்தை பெரும்பாலான முதல்வர்கள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ராமதாஸின் தூக்கத்தை கெடுக்கும் மது..! குடிமகன்களின் நிலை என்னவாகும்..?

தமிழ்நாட்டில் மருத்துவர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் மருத்துவர்கள் ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீடிக்க கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு மீண்டும் மக்களோடு பேச இருக்கிறார். இந்த மோடி பேச்சின்போது, அவர் ஊரடங்கு நீடிப்பு தகவலை வெளியிடுவார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி ஊரடங்கை நீடிக்க முடிவு செய்துள்ளது சரியான முடிவு. வல்லரசு நாடுகள் பலவற்றோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் இப்போதைய நிலை பரவாயில்லை. இந்த நிலையை நாம் உறுதிசெய்ய ஊரடங்கை நீடிப்பது முக்கியமானது” என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி