ஆப்நகரம்

உத்தரப்பிரதேசத்தில் புழுதிப்புயல்: நேற்று ஒரே நாளில் 16 பேர் பலி!

உத்தரப்பிரதேசத்தில் புழுதி புயல் காரணமாக நேற்று ஒரே நாளில் 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Jun 2018, 2:05 pm
உத்தரப்பிரதேசத்தில் புழுதி புயல் காரணமாக நேற்று ஒரே நாளில் 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil dust storm


கடந்த சில தினங்களாக வடமாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழையும், புழுதிப்புயலும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அசாதரண சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஏற்பட்ட புழுதிப்புயலின் காரணமாக 16 பேர் பலியாயினர். அதிகபட்சமாக முராதாபாத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதே போல், முசாஃபாநகர், மீரட், சாம்பஹல் ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றிலும் மூன்று பேர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து மீட்டுப்பணி கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறியதாவது:

‘புழுதிப்புயல் காரணமாக நேற்று மிகஅசாதரண சூழல் ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகிளல் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. தற்போது இந்த புழுதிப்புயலில்13 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மரங்கள் விழுந்ததாலும், வீடுகள் இடிந்துவிழுந்ததாலும் உயிரிழந்தனர். தற்போது அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அம்ரோஹா பகுதியில் டின் ஷெட் இடிந்து விழுந்து ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே 24 மணி நேரத்துக்குள்ளாக நிவாரணம் வழங்கும் வகையில், மாவட்ட மாஜிஸ்த்ரேட்டுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்’.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி