ஆப்நகரம்

சிதம்பரத்துக்கு நாளை வரை இந்த சிக்கல் இல்லை!!

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்தை நாளை மதியம் 12மணி வரைக்கும் கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜாமீன் தொடர்பான இவரது மனு மீண்டும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 Aug 2019, 4:34 pm
சிபிஐ பதிவு செய்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் கீழ் சிதம்பரத்தை ஏற்கனவே சிபிஐ கைது செய்து இருப்பதாலும், டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த அதே வழக்கை எதிர்த்து சிதம்பரம் மனு தாக்கல் செய்து இருப்பது அர்த்தமற்றது என்று திட்டவட்டமாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
Samayam Tamil Chidambaram


இந்த நிலையில், 5 நாட்கள் சிபிஐ காவல் முடிந்து இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜர்படுத்த்தபட்டார். மீண்டும் இவர் சிபிஐ காவலுக்கு செல்கிறாரா? இல்லையா? என்பது இன்னும் கொஞ்சம் நேரத்தில் தெரிந்துவிடும்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குடன், இவர் மீதான அமலாக்கத்துறை வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து இருந்தார். ஏற்கனவே இன்று வரை கைது செய்யக் கூடாது என்று இவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இன்று காலக்கெடு முடிவடைந்த நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
மீண்டும் சிபிஐ காவலுக்குள் செல்கிறாரா சிதம்பரம்?

அப்போது மீண்டும் நாளை மதியம் 12மணி வரை கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் நாளை மதியம் விசாரணைக்கு வருகிறது.
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் செப்டம்பர் 3ம் தேதி தீர்ப்பு!

இதற்கிடையே இன்று நடந்து கொண்டிருக்கும் சிபிஐ தொடுத்த வழக்கில், சிதம்பரத்துக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர்களும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுமான கபில் சிபல், அபிஷேக் மானு சிங்வி வாதாடுகின்றனர். இவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். சிதம்பரமும் நீதிமன்றத்துக்கு சிபிஐயால் அழைத்து வரப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி