ஆப்நகரம்

வட இந்தியாவை உளுக்கிய நிலநடுக்கம் : அச்சத்தில் மக்கள்

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் வடக்கு மாநிலமான ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் சில பகுதிகளில் நேற்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது.

Samayam Tamil 6 Feb 2019, 7:22 am
புதுடெல்லி : இந்திய தலைநகர் டெல்லி மற்றும் வடக்கு மாநிலமான ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் சில பகுதிகளில் நேற்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது.
Samayam Tamil earthquake-1


செவ்வாய் கிழமை இரவு 10.20 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 40 விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.

ஸ்ரீநகரிலிருந்து 118 கிமீ தொலைவில் வடமேற்கு திசையில் இந்த நிலநடுக்கம் நிலை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானின் இஸ்லமாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கூட தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.



அடுத்த செய்தி