ஆப்நகரம்

அசாம் மாநிலத்தை உலுக்கிய நிலநடுக்கம்.. ஷாக் தகவல்!

அசாம் மாநிலம் டெஸ்பூர் பகுதியில் 4.7 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் தலைநகர் கவுகாத்தி மட்டுமல்லாமல் அண்டை நாடுகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிகிறது.

Samayam Tamil 17 Feb 2021, 10:26 pm
அசாம் மாநிலம் டெஸ்பூர் அருகே 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. டெஸ்பூரில் இருந்து வடமேற்கு திசையில் 17 கிலோமீட்டர் தொலைவில் இன்று மாலை 5.54 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil earthquake


அசாம் தலைநகர் கவுகாத்தியிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வங்கதேசம், சீனா, பூட்டான், மியான்மர் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை.. இனி தாங்க முடியாது குருநாதா!
10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்சேதமும், உயிர்சேதமும் இதுவரை ஏற்படவில்லை என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்களான இவற்றில் அடிக்கடி லேசான அல்லது மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்!
இதனால், இம்மாநிலங்களில் முதலீடு செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நில அதிர்வு தடுப்பு வசதி கொண்ட வீடுகளை கட்ட வேண்டியிருக்கிறது. உலகிலேயே அதிகம் நிலநடுக்கங்கள் ஏற்படக்குடிய ரிஸ்க் கொண்ட பகுதிகளின் பட்டியலில் வடகிழக்கு இந்தியா ஆறாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி