ஆப்நகரம்

குஜராத்தில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக பதிவு

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.8ஆக பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 14 Jun 2020, 9:10 pm
டெல்லி - புறநகர் எல்லைப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் வட மாநிலங்கள் பலவற்றில் உணரப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் இன்று இரவு 8.13 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராஜ்கோட்டில் இருந்து வடக்கு-வடமேற்காக சுமார் 122 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

நரேந்திர மோடிக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்?

ஆனால், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த 2001ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 20,000 பேர் வரை உயிரிழந்தனர். 1,67,000 பேர் படுகாயமடைந்தனர். 4 லட்சம் வீடுகள் தரைமட்டமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி