ஆப்நகரம்

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் சுர்ஜித் பாலா திடீர் ராஜினாமா!

நேற்று ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா; இன்று பொருளாதார ஆலோசகர் சுர்ஜித் பாலா ராஜினாமா: மோடி அரசு திணறல்!

Samayam Tamil 11 Dec 2018, 1:00 pm
நேற்று ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்த நிலையில், இன்று பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் சுர்ஜித் பாலா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Samayam Tamil surjit bhalla


பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றப் பின் இந்தியாவின் பொருளாதார நிலை கணிசமாக சரிவை சந்தித்தது. இந்நிலையில், நாட்டின் பொருளாதார நிலையை சமாளிக்கவும், மற்ற உலக நாடுகளுக்கு இணையாக பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை பிரதமர் மோடி அமைத்தார். இந்த குழுவின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினராக உள்ள பிபேக் தேவ்ராய் நியமிக்கப்பட்டார்.
(
RBI Governor Resigns: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா )

மேலும், பொருளாதாரக் குழுவில் மொத்தம் ஐந்து பேர் கொண்ட உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். சுர்ஜித் பாலா, ரத்தின் ராய், அஷீமா கோயல் ஆகியோர் பொருளாதாரக்க் குழுவின் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். நிதி ஆயோக்கின் முதன்மை ஆலோசகராக இருந்த ரத்தன் வாட்டல், இந்த குழுவில் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகளை குறித்து பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்குவது இந்த குழுவின் முதன்மை பணியாகும்.

இந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் உறுப்பினராக இருந்த சுர்ஜித் பாலா, கடந்த டிசம்பர் 1ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். நேற்று ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா செய்த நிலையில், தற்போது அடுத்தடுத்து பொருளாதார உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளதாரக் கொள்கையே பதவியில் இருப்பவர்கள் ராஜினாமா செய்வதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி