ஆப்நகரம்

சூப்பர் ஸ்ப்ரெட்டர் ஆக மாறுகிறதா பீகார் தேர்தல்? அதிர்ச்சி நிலவரம்!

தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Oct 2020, 10:43 am
நாடு முழுவதும் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது. இதனால் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ஒத்தி போடப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் சட்டமன்ற தேர்தலை நடத்தும் முதல் மாநிலமாக பீகார் இருக்கிறது. தேர்தல் என்றால் பிரச்சாரங்கள் களைகட்டும். வீடு வீடாகச் சென்று நோட்டீஸ், பரிசுப் பொருட்கள் வழங்குவது என மக்களிடையே அரசியல் கட்சியினர் மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வர். ஆனால் கொரோனா பாதிப்பு நீங்காமல் இருக்கும் சூழலில், இவ்வாறு பிரச்சாரம் செய்வது ஆபத்தை விலைக்கு வாங்குவதற்கு சமம்.
Samayam Tamil bihar election campaign


இதையொட்டியே பிரச்சாரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் முக்கியமானது முகக்கவசம் அணிதல் மற்றும் போதிய சரீர இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகியவை ஆகும். மூடிய அரங்கில் நடைபெறும் தேர்தல் கூட்டங்கள், பிரச்சாரங்களில் அதிகபட்சமாக 200 பேர் அல்லது 50 சதவீத இருக்கைகள் மட்டும் நிரம்பும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இவற்றையெல்லாம் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். எனவே “சூப்பர் ஸ்ப்ரெட்டர்” ஆக நிலைமை மாறக்கூடும் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

கொரோனா பீக் முடிஞ்சுதா? எப்ப முழுசா ஓடிப் போகும் - வெளியான முக்கியத் தகவல்!

மாநில அரசைப் பொறுத்தவரை என்ன நடந்தாலும் சட்டமன்ற தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் தற்போதைய சூழலில் தேர்தல் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளன.

வழிகாட்டுதல்களை மீறிய நிகழ்வுகள்

* சாப்ராவில் ஐக்கிய ஜனதா தளம் நடத்திய கூட்டத்தில் வேட்பாளர் சந்திரிகா ராய்க்கு ஆதரவு திரட்டப்பட்டது. இதில் அதிகப்படியான மக்கள் கூட்ட நெரிசலுடன் கலந்து கொண்டனர்.

* கயாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றுள்ளனர். அப்போது விதிகளை மீறி ஏராளமானோர் உடன் சென்றுள்ளனர்.

அடுத்த செய்தி