ஆப்நகரம்

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி சொத்துகள் முடக்கம்

கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.1.16 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Samayam Tamil 13 Mar 2018, 5:48 pm
கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.1.16 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
Samayam Tamil ed attaches karti chidambarams rs 1 16 crore worth asserts
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி சொத்துகள் முடக்கம்


ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு பெற உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐ பல நாட்கள் நடத்திய விசாரணைக்குப் பின் நேற்று அவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வரும் 24ம் தேதி வரை அவரை டெல்லி திஹார் சிறையில் அடைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும், அவரது ஜாமின் மனுவின் மீதான விசாரணை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலை, இன்று விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கார்த்தியின் ஜாமின் மனு மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் பணிபுரிந்த கணக்குத் தணிக்கையாளர் எஸ்.பாஸ்கர ராமனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று கார்த்தி சிதம்பரத்தின் ஏ.எஸ்.சி.பி.எல். (ASCPL) நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி