ஆப்நகரம்

ஐடிபிஐ வங்கி கடன் அபேஸ் விவகாரம்; மல்லையா மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்..!

ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளுக்கு வாங்கிய கடனை திருப்பிய செலுத்தாத விவகாரத்தில், விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

TNN 14 Jun 2017, 5:43 pm
டெல்லி: ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளுக்கு வாங்கிய கடனை திருப்பிய செலுத்தாத விவகாரத்தில், விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil ed files first charge sheet against vijay mallya
ஐடிபிஐ வங்கி கடன் அபேஸ் விவகாரம்; மல்லையா மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்..!


விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 14 வங்கிகளிடம் ரூ.4.300 கோடி பணம் வாங்கிக் கொண்டு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளது. அதில் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் ரூ.900 கோடி வாங்கியுள்ளது. இதையடுத்து கடந்த 2016 மார்ச் மாதம் விஜய் மல்லையா மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் விஜய் மல்லையா லண்டனிற்கு தப்பிச் சென்று விட்டார். இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்தப்படியாக ஐடிபிஐ வங்கியில் அதிகப்படியாக கடன் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

அது இரண்டு தவணைகளாக ரூ.900 கோடி அளவிற்கு வாங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை மல்லையா மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக 17 வங்கிகளில் ரூ.9000 கோடி அளவிற்கு கடன் வாங்கிய மல்லையா நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

IDBI money laundering case: ED files first charge sheet against Vijay Mallya, others.

அடுத்த செய்தி