ஆப்நகரம்

சென்னையில் நிரவ் மோடிக்கு தொடர்புடைய கடைகளில் விசாரணை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மெகா மோசடி தொடர்பாக நிரவ் மோடிக்கு தொடர்புடைய நகைக்கடைகளில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Samayam Tamil 17 Feb 2018, 2:40 pm
சென்னை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மெகா மோசடி தொடர்பாக நிரவ் மோடிக்கு தொடர்புடைய நகைக்கடைகளில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Samayam Tamil ed probe in three jewellery shops linked to nirav modi over pnb banking fraud
சென்னையில் நிரவ் மோடிக்கு தொடர்புடைய கடைகளில் விசாரணை


பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவின் 2வது பெரிய அரசு வங்கி ஆகும். இவ்வங்கி பங்குச்சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11,400 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் பிரபல நகைக்கடை அதிபர் நிரவ் மோடி மற்றும் அவரது மனைவி மீது புகார் கூறப்படுகிறது. இந்த முறைகேடு கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

இந்த வழக்கு சிபிஐ அதிகாரிகள் ஓய்வுபெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் காரத், மனோஜ் ஹேமந்த் காரத் ஆகிய மூவரை சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

இதனிடையே, சென்னையில் நிரவ் மோடிக்கு தொடர்புடைய மூன்று பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, தேனாம்பேட்டையில் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தப்படுகிறது.

இதுவரை இந்த வழக்கு தொடர்பான விசாரணை வளையத்தில் சிக்கிய பி.என்.பி. ஊழியர்கள் 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி