ஆப்நகரம்

ப.சிதம்பரம் நேரில் ஆஜராக சம்மன்; இம்முறை சிக்கிக் கொண்டது இப்படியொரு வழக்கில்...!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஏர் பஸ் விமான வாங்கிய வழக்கில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

Samayam Tamil 19 Aug 2019, 3:57 pm
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, ப.சிதம்பரம் நிதியமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2007ஆம் ஆண்டு ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 48 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 68 விமானங்களும் ரூ.70,000 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil P Chidambaram


இந்த செலவினங்களால் அந்நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ஏர் பஸ் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.

Also Read: மோடி கையில் அணு ஆயுதம் இருந்தால், பாதுகாப்பாக இருக்காது: பாக். பிரதமர் இம்ரான்கான்!

இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையொட்டி அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதற்காக வரும் 23ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read: 2 வாரம் தான்; அதுக்குள்ள விசாரணையை முடிங்க- உன்னோவ் கார் விபத்து வழக்கில் உச்சநீதிமன்றம் கெடுபிடி!

இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேலையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு, ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விசாரணையை சந்தித்து வருகிறது.

இந்த வழக்குகளில் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: கட்சிக்குள் இருந்து கொண்டே காங்கிரஸ் தலைமையை விளாசும் ஹூடா!!

அடுத்த செய்தி