ஆப்நகரம்

கொரோனாவால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள்; உண்மையான பேரிடர்!

கோவிட்19 காரணமாக உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், 191 நாடுகளில் உள்ள 1,575,270,054 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என யுனெஸ்கோ ஆய்வில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 16 Apr 2020, 6:31 pm
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் 157 கோடி மானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கல்வி என்பது குழந்தைகளிடம் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புகளை வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பாக மட்டுமல்லாமல், ஒரு தேசத்தின் வளர்ச்சியை அதிகரிக்கின்ற ஒன்றாக இருக்கிறது. கல்வியினால் ஒரு நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. அனைவருக்கும் தரமான கல்வி கொடுத்தால், அது நல்ல பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் என்று கூறப்படுகின்றது. ஏழை நாடுகள் கல்வியின் மீது கவனம் செலுத்தினால், பொருளாதாரத்தில் விரைவில் மேம்பாடு அடையலாம்.

இந்த நிலையில், உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றன. இதனால், ஒவ்வொரு நாடும் முடக்கப்பட்டு, பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். குறிப்பாக, கொரோனா அச்சத்தால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கொரோனாவை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Corona Updates in India: குப்பையில் கிடக்கும் பழங்களை தேடி சாப்பிடும் அவலம்!!

தொழிற்சாலைகள், உற்பத்தி நிலையங்கள், தயாரிப்பு மையங்கள், கட்டுமான தொழில்கள் என அனைத்து விதமான பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் உலக நாடுகளின் பொருளாதாரம் கவலைக்கிடமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் 157 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது, பொருளாதார பேரிடரை விட மோசமான பேரிடராகும்.

கோவிட்19 காரணமாக உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், 191 நாடுகளில் உள்ள 1,575,270,054 (157 கோடி) மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என யுனெஸ்கோ ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் பள்ளி பருவத்தினர் மட்டும் 74.3 கோடி என்பது கூடுதல் அதிர்ச்சிகரமான விஷயம்.

இதென்ன புது சிக்கல்? கொரோனா குணமானவருக்கு மீண்டும் அறிகுறி- குழம்பிய மருத்துவர்கள்!

நெருக்கடி காலங்களில் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படுவது புதிதல்ல என்றாலும், தற்போது கல்விக்கு ஏற்பட்டிருக்கும் இடையூறு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் என்று குறிப்பிட்ட யுனெஸ்கோ தலைவர் ஆட்ரே அஸவுலே தெரிவித்துள்ளார். இதே நிலை நீடித்தால், கல்வி உரிமைக்கே அது அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது, குழந்தைகள் பள்ளிக்கு திரும்புவதை உறுதி செய்வது மிகப்பெரும் சவாலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

பொருளாதார இலக்கை அடைய கல்வியை குழந்தைகளுக்கு அளித்து வரும் பெற்றோர்கள், பள்ளிகளை மூடுவதால் கடுமையாகப் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, பள்ளிகளை மூடுவதால் வேறு பல எதிர்மறையான விளைவுகளும் ஏற்படுகின்றன. வீட்டில் போதிய ஊட்டச்சத்து பெற முடியாத குழந்தைகள் கல்வியுடன் பள்ளியில் வழங்கப்படும் உணவையும் சார்ந்திருக்கிறார்கள். எனவே, பள்ளிகள் மூடப்படுவதால் மோசமான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி